Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நல்ல எண்ணம் வேண்டும்

நல்ல எண்ணம் வேண்டும்

நல்ல எண்ணம் வேண்டும்

நல்ல எண்ணம் வேண்டும்

ADDED : நவ 04, 2012 12:11 PM


Google News
Latest Tamil News
* கடவுள் எல்லையற்ற கருணைக்கடலாக இருக்கிறார். எல்லா உயிர்களிலும், பொருட்களிலும் அவர் நிலைபெற்று இருக்கிறார். அவரை அறிந்து கொள்ள எளிய வழி பக்தி ஒன்றே.

* பொறியில் சிக்கும் எலி போல, மனிதன் உலகம் என்னும் பொறியில் ஆசை வயப்பட்டு அழிந்து போகிறான்.

* மனிதனைத் தாக்கும் ஆயுதம் நாக்கு. நாக்கினால் உண்டான காயம் ஆற நீண்டகாலம் ஆகும். பிறர் மனதை புண்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது.

* பாம்பின் விஷம் நச்சுப்பல்லில் மட்டும் இருக்கிறது. ஆனால், மனித இதயத்தில் தீய எண்ணம் புகுந்து விட்டால் நம் உடல் முழுவதும் நஞ்சு பரவி விடும். எனவே நல்ல எண்ணங்களுடன் வாழுங்கள்.

* ஐம்புலன்களின் வாயிலாகவே உலகத்தோடு தொடர்பு கொள்கிறோம். இவற்றை முறையாக பயன்படுத்தாவிட்டால், அவற்றிற்கு அடிமையாவோம்.

* தவறு செய்யாத மனிதர் இல்லை. ஆனால், அறிந்தோ அறியாமலோ பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை மறக்கும் அளவிற்கு தவறு செய்து விடாதீர்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us